திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையின் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோயிலை திறந்து வழக்கமான பூஜைக்காக சென்றபோது, மூலவர் சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர் இரும்புக் கம்பி கொண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோயிலுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதே கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு முயற்சி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....