கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான கார்த்திக் மீது கோவை மத்திய சிறையில் சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், மூவரை வேறு சிறைக்கு மாற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கைது செய்யப்பட்ட கார்த்திக், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது வலது கை மற்றும் காலில் காயமடைந்ததால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கார்த்திக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், நந்து என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட நவீன்குமார், ஜீவா என அழைக்கப்படும் ஜீவானந்தம், மகாவீர் என்ற பெயரில் அறியப்படும் மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்செரிக்கை நோக்கத்திலும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மூன்று கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறை நிர்வாகத்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....