கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்கி நகர், கோபால் நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தூய்மை, சாக்கடை பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.



கல்கி நகர் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.




அவிநாசி பிரதான சாலையில் ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி நகர் முதல் மணல் பாலம் வரையிலான பகுதிகளில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் மண்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




கோபால் நகர் பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.




ஜெகநாதபுரம் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு குடிமைச் சேவைகள் குறித்து விசாரித்தார். தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...