கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 230 அடியார்கள் பயிற்சி பெற்றனர். சைவத்திரு குமரலிங்கம் தலைமையில் பன்னிரு திருமுறை, சமய தீக்கை மற்றும் சடங்கு முறைகள் பற்றிய விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழக பன்னிரு திருமுறை ஆய்வுமையத்தின் வாயிலாக மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாள்களில் தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் செயலாளர் சைவத்திரு ப. குமரலிங்கம் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.



பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார் 'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக!' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். "திருமுறைகளை உள்ளன்புடன் ஓதுவதே உயிர் உய்வதற்கான பயிற்சியாக அமையும். குருநாதரின் அருளுபதேசமும், தன்னலத்தை மறந்து அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் சிவத்தைச் சார்கின்ற பக்திநெறி" என்பதை தமது உரையில் வலியுறுத்தினார்.



அறிஞர்களால் தமிழ்நெறி வழிபாட்டின் சிறப்பு, பன்னிரு திருமுறை வரலாறு, மெய்கண்ட சாத்திரங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன. அருள் குருநாதர் சைவத்திரு ஒளியரசு அடியார்களுக்கு சமய தீக்கை செய்வித்தார். சைவ அனுட்டான செயல்முறை விளக்கமும், திருமுறைகளை ஓதி வாழ்வியல் சடங்குகளை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளும் அடியார்களுக்கு வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில் சைவத்திரு பொறியாளர் முத்துசாமி தமிழ் நெறி வழிபாட்டின் சிறப்பினை விளக்கி, அடியார்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சி வகுப்பில் சிறந்த பங்களிப்புக்காக இலண்டனிலிருந்து வந்த அடியார்கள் சைவத்திரு காமராஜ் மற்றும் சைவத்திரு பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

மூன்று நாள் பயிற்சி வகுப்பின் வாயிலாக 230 அடியார்கள் தமிழ் வழிபாட்டு நெறிமுறையை முழுமையாக அறிந்து பயன்பெற்றனர். இப்பயிற்சி வகுப்பு தமிழ் வழிபாட்டு முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....