கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இந்து இளைஞர் முன்னணி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. அஜித்குமார் தலைமையில் அரசு பள்ளிகள் மேம்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் அரசினர் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை ஆண், பெண் பள்ளிகள் என மொத்தம் 1212-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பல இடங்களில் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பதாகவும், இதனால் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பல அரசு பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உடனடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி, வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வக உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை அரசு சார்பில் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...