கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Electrician, Fitter, MMV, Wireman, Welder உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் இலவசப் பயிற்சியுடன் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.


Coimbatore: கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 3, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician, Fitter, MMV, Wireman (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்) மற்றும் Welder (ஓராண்டு பயிற்சி காலம்) ஆகிய தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.




இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.




Wireman மற்றும் Welder தொழிற்பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், Electrician, Fitter, MMV தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.




பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதனுடன் வருகையின் அடிப்படையில் ரூ.750 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.




விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும்.




மேலும், பயிற்சியாளர்களுக்கு இட வசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...