நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் அருகே ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 18ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், முந்தைய இரவு அச்சங்குளம் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருந்த தம்பதியினர் தங்களது வலைகளை எடுக்க மீண்டும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, கப்பினி தோட்டம் அருகே உள்ள இட்டேரி வருவாய் நிலப்பகுதியில் ஆடையின்றி முகம், தலை மற்றும் கால்களில் ரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் நீலாம்பூர் கிராம உதவியாளர் பாலமுரளிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் துர்கா அளித்த புகாரின் பேரில், நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், சம்பவம் நடைபெற்ற 17ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், சம்பவ இடம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தங்களுக்குள் தகராறு செய்து சத்தமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் டார்ச் லைட் அடித்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருப்பதாக கூறியதால் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கோகுல் (25) என்பவர் நேற்று மாலை நீலாம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், மற்றொரு நபரான ஹரிஷும், உயிரிழந்த சரவணனும் AG புதூரில் உள்ள லைஃப் கண்டெய்னர் சிலிண்டர் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாக தெரியவந்தது.

மூவரும் சம்பவ இடத்திற்கு மது அருந்தச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சரவணனை கற்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வரதராஜன் மகன் சரவணன் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சரணடைந்த கோகுலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஹரிஷை தேடி வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...