விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியர்களை ஆனைமலை டிஎஸ்பி பவித்ரா எச்சரித்தார்.


Coimbatore: கோவை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதுடன், போதைப் பொருள் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக, ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், வேட்டைக்காரன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது கடை ஊழியர்களிடம் பேசிய டிஎஸ்பி பவித்ரா, “டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.

மேலும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...