மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges ஆகியவற்றை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




கோவை:

மின்சாரத்துறையில் நிலையான கட்டணம் மற்றும் Demand Charges ஆகியவற்றை குறைக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நிலை மற்றும் தேவை கட்டணங்களை (Demand - Fixed Charges) 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.



மேலும், ரூப் டாப் சோலார் (Roof Top Solar) மின் உற்பத்தி திட்டத்திற்கு உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“தமிழக ஜவுளித் தொழில்துறைக்கு ஆண்டுதோறும் 110 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் பேல் பருத்தி மட்டுமே விளைவிக்கப்படுகிறது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,” என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...