போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் இரு சரகங்களுக்கும், மாவட்டத்திற்கும் சிறப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


Coimbatore: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான காவலர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.




அதேபோல தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று, மாநகருக்கு இரண்டு என போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாநில அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




இதையடுத்து கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரு சிறப்புப் படைகளையும் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.




இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் கூறியதாவது: போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து வருகின்றன. அதற்கான காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவையான வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.




அதன்படி, கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு சரகத்திற்கு தலா ஒரு SI மற்றும் 5 காவலர்களும், அவர்களுக்கு தலா ஒரு வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.




அதேபோல மாவட்டத்திற்கும் ஒரு SI தலைமையில் 5 காவலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள். இந்த சிறப்புப் படைகள் மூலம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...