கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வேன் டிரைவரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...