கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வேன் டிரைவரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...