22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக சுட்டிக்காட்டி, 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் வலியுறுத்தி வருகிறது.



வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடு செய்தல், பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகளை கேட்பது என மருத்துவத்துறையில் ஒன்றிய அரசு அநியாயத்தை அரங்கேற்றி வருகிறது என்று இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது நீட் தேர்வு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், கடந்த காலங்களில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நினைக்கும்போது, மாணவச் செல்வங்களின் வாழ்வாதாரமும், மருத்துவர் கனவும் எவ்வாறு ஒன்றிய அரசால் சூறையாடப்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கையில் நெஞ்சமே பதறுகிறது என்று பல்சமய நல்லுறவு இயக்கம் தெரிவித்துள்ளது.

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று இயக்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சட்டத்திற்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுடன் அரங்கேறும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் Haji J Muhammad Rafi வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்து வருவதாகவும், இதனை ஒழிக்க தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...