மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்களில் 9 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்ற மாணவர் 1050 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராமநாதன். ராமநாதன் 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை இடை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் துணி நூல்களை எடுக்கும் (பிசிறு வெட்டுதல்) வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையை சேர்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் ராமநாதன மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.

தொடர்ந்து படித்து வந்த ராமநாதன் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்விற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் ராமநாதன் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, ராமநாதன் கூறுகையில், குழந்தை தொழிலாளிகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டுமென்பதே தனது விருப்பம். குழந்தை தொழிலாளியாக உள்ளவர்கள் தன்னைபோல மீண்டு வரவேண்டும். 

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பாடத்தை தேர்வு செய்ய உள்ளேன். தமிழாசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பம்" என்றார்.

குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட ராமநாதன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து மாணவர்களின் தன்னம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக ராமநாதனின் ஆசிரியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொழிலாளியாக இருந்தால் அவர்களை மீட்டு மறுவாழ்வும், கல்வியும் வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தொடர்ந்து படிக்க உயர் கல்விக்கான உதவித் தொகையும் அரசு வழங்கி வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருவதாகவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.

கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக வறுமையை கடந்து அசத்தியுள்ள ராமநாதன், மற்ற மாணவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என்றால், அதுமிகையல்ல.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...