மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால் மூன்று உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமியின் உறுப்பு தானம் மூன்று நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளித்துள்ளது. மே 10ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.




கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.




இந்த துயரமான சூழலிலும் மனஉறுதியுடன் செயல்பட்ட கருப்புசாமியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.




அவரது கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.




உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கருப்புசாமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான வெஞ்சமடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




இளம் வயதில் உயிரிழந்த கருப்புசாமியின் குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவு மூன்று உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...