PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பு மற்றும் BJP ஊடுருவல் முயற்சி என்று குற்றம் சாட்டி புதிய அரசு திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர்.


Coimbatore: மத்திய அரசின் PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள BSNL அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட கழகத்தினர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து நவீன வசதிகளை கொண்டுவரும் வகையில் PM Shri திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இது இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு தற்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கழகத்தினர், இந்த திட்டம் இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும், மறைமுகமாக BJP ஊடுருவ முயற்சிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், "இந்த திட்டம் மறைமுகமாக BJP தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் செயல். இது இந்தியை திணிக்கும் செயல். புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு இந்த திட்டத்தை எதிர்த்து போராடியதோ அதுபோலவே எதிர்த்து இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என வலியுறுत்தினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...