ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை:

இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் ரயில்வே வாரியம், 14.8 லட்சம் பணியிடங்களில் சுமார் 2 சதவீதத்தை இந்த ஆண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு பாதுகாப்பு மற்றும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, ரயில்வே துறையில் ஏற்கனவே 30,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவை நிரப்பப்படாமல் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காலியான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்ட சூழலில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது ரயில்வே துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பொதுத்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...