கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்களுக்கு 3540 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.


Coimbatore: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 3540 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.




கோவையில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.




பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கினை செலுத்தி அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் ஓரிரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.




இதனை அடுத்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கினை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, நிழல் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




மாவட்ட நிர்வாகம் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...