கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.


Coimbatore:

கோவை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,22,759 ஆண் வாக்காளர்கள், 14,21,179 பெண் வாக்காளர்கள் மற்றும் 534 இதர வாக்காளர்கள் அடங்குகின்றனர். மாவட்டம் முழுவதும் 3,540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் முழுமையாக நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மற்றும் இளைஞர்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் இணையவழி நேரலை வசதியுடன் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 70 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் மொத்தம் 16,992 வாக்குப்பதிவு அலுவலர்கள், 165 நுண்பார்வையாளர்கள் மற்றும் 6,240 காவல்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 3 வாகனங்கள் வீதம் மொத்தம் 39 வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபிக் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...