வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


Coimbatore: வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதி, ஜெயிலை தோட்டங்கள், வால்பாறை நகர்ப்பகுதி, கோட்டூர், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, காளியாபுரம், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், வால்பாறை படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பழைய மலைக்கள்ளன் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தபோது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரோப்வே கார் கேபிள் திட்டம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைகள் மறுஅளவீடு செய்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.

இயற்கை சூழலை பாதிக்காத வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வனத்துறை வசூலிக்கும் பல்முனை நுழைவு கட்டணம் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வால்பாறை பகுதியில் மாற்றுத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோட்டூர் பகுதியில் தென்னை சார்ந்த மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். வால்பாறை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய நவீன அடுக்குமாடி கட்டமைப்புகள் உருவாக்கி நகர்ப்புற மேம்பாடு செய்யப்படும் என்றும் லட்சுமண சிங் தெரிவித்தார்.

முன்னதாக வால்பாறையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்புமுடக்கியது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...