உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் பரப்புரை நடத்தியதாக, அதிமுக சார்பிலான வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணா சாலையில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து, உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் ஸ்ரீ வத்சவாவிடம், திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆவின் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரன் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு புகார் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடுமலை பகுதியில் பரப்புரை நடத்த ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தனர்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக பரப்புரை மேற்கொள்ளும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே பிரச்சாரம் நடத்தச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...