கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதியின்படி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நெசவாளர் நல கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக்கொண்டனர்.


Erode: தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கந்தவேல், கருணாநிதி ஜெகநாதன் ஆகியோர் ஈரோட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி, மனு அளித்துள்ளனர்.




தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் கூறுகையில், "ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினோம். தொடர்ந்து அவரிடம் மனு அளித்தோம். திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நெசவாளர் நலனுக்காக 16 கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் தொடர்பான திட்டங்களும் ஜவுளித்துறையில் அதிகம் உள்ள சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.




"கடந்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சாதா விசைத்தறிகளை நாடா இல்ல விசைத்தறிகளாக நவீனப்படுத்த முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.




"திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலவச மின்சார அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பை தேர்தல் வாக்குறுதியாக வெளியீடு செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் வலியுறுத்தியுள்ளோம்" என்று தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் தெரிவித்துள்ளார்.




தமிழக அரசின் நெசவாளர் நல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவச மின்சார வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நெசவாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...