கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்குரிய வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு இளம் பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், இந்த விபசார வலையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்தனர்.

இதில், சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகிய இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக கோவையில் வாடகை வீடுகளை எடுத்து, குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி விபசார தொழில் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், தனியாக வரும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை முழுமையாக சரிபார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...