நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை:

கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து கலக்கப்படுவதால், ஆற்றின் நீர்தன்மை மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.



இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “Let’s Make Coimbatore Sweet Again” என்ற முன்னெடுப்பின் கீழ் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள் மனு அளித்து, நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, “அரசாங்கமே சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்குகிறது. தனியார் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் இதற்கு காரணமாக உள்ளன,” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அதில் அதிக அளவில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆறு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல் கட்டமாக 700-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “அதைவிட முக்கியமானது குடிநீர் பாதுகாப்பு பிரச்சனை. மது அருந்துபவர்கள் பணம் கொடுத்து வாங்கி அருந்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் தினமும் குடிநீர் என்ற பெயரில் விஷத்தை குடித்து வருகின்றனர்,” என்று கூறினார்.

மேலும், கோவையில் பல கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் சூயஸ் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், “வேங்கை வயலுக்கு ஒரு நியாயம், நொய்யலுக்கு ஒரு நியாயம் என்ற நிலை இருக்கக் கூடாது. அரசாங்கமே கழிவுநீரை ஆற்றில் கலக்க அனுமதிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...