கோவையில் தீபாவளி ஷாப்பிங்: கடைக்குள் வருமாறு கட்டாயப்படுத்தினால் வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை

கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் தீபாவளி ஷாப்பிங் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடை, நகைகள், பட்டாசு உள்ளிட்டவை வாங்க வருவோர் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சில கடைகள் ஊழியர்களை நியமித்து, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தங்கள் கடைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் கையைப் பிடித்து இழுப்பதால் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஊழியர்கள் அவரை கடைக்கு வருமாறு வற்புறுத்தியதோடு, அவதூறாகவும் பேசியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழில் போட்டியில் சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதனைக் கண்காணிக்க அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைக்கு வெளியே நின்று யாரையும் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்படும்," என்று எச்சரித்தார்.

காவல்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. பொதுமக்களும் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...