உடுமலை அருகே இடிமின்னலுடன் கனமழை: வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உரல்பட்டி கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவரின் சிமெண்ட் மேற்கூரை வீட்டின் மீது இரவு 11 மணி அளவில் மின்னல் தாக்கியது.



இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி மற்றும் ரொக்கம் 10,000 ரூபாய் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சுப்பிரமணி வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி வள்ளிநாயகம் (45) தனது மகள் மற்றும் குழந்தையுடன் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வள்ளிநாயகம் கூறுகையில், "நேற்று இடைவிடாமல் கனமழை பெய்து வந்தது. இரவு 11 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டது. உடனே வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம். அருகில் இருந்த பொதுமக்கள் வீடு தீப்பிடித்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்த பிறகுதான் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் மின்விபத்து ஏற்பட்டு அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது தெரிய வந்தது. தற்போது சமையல் செய்வதற்குக் கூட பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...