மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடையினை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மது பாட்டில்களுடன் தரையில் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை ஆவரம்பாளையம் பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு, தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு இருந்த மதுக்கடையை போராட்டம் நடத்தி கடை அப்புறபடுத்திய நிலையில் மீண்டும் அங்கு கடை அமைந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...