கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 12வது மகாசபை கூட்டம் நடைபெற்றது

கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 12வது மகாசபை கூட்டம் வெள்ளக்கிணரில் நடைபெற்றது. சாலை விபத்துக்களில் இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 12வது மகாசபை கூட்டம் வெள்ளக்கிணரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் துணை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான சந்திரசேகர், ஜீவா, துரைசாமி, யோகநரசிம்மமூர்த்தி மற்றும் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செயலாளர் தேவேந்திரன் ஆண்டறிக்கையை வாசித்தார். அதைத் தொடர்ந்து, பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில், கேரளா வயநாட்டில் கனமழையால் உயிரிழந்தவர்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளில் வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் மேல் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும், மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய தடுப்புச் சுவர்களில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் தொங்கும் அரசு மற்றும் தனியார் கேபிள்கள், இண்டர்நெட் கேபிள் வயர்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாய்பாபா காலனி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள புதிய மேம்பாலப் பணிகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமலும், சேவைச் சாலைகள் அமைக்காமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்குவதற்கு முன், மாற்றுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைத்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் விரைவாக செல்ல வசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உருமாண்டம்பாளையம், வெள்ளகிணர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே கடவுப் பாதைகளில் மேம்பாலங்கள் அமைக்க ரயில்வே துறையினரை வலியுறுத்த வேண்டும் என்றும், வெள்ளகிணர் முதல் மயிலம்பட்டி வரை உள்ள சாலையை 80 அடி அகலமாக விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் அளவீடுகள் செய்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு, ஜி.என்.மில்ஸ், ஐ.டி.ஐ பகுதி, சேரன் நகர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை சரியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...