இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பிரச்சனை, கோயில் தரிசன கட்டணம் குறித்து விமர்சனம் செய்தார்.



கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



இராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் ரகசிய அமைப்பு துவங்கப்பட்டிருப்பதை உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவையில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், "பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டால் தமிழகத்தில் அதிகளவில் கொலைகள் நடக்கின்றன," என்று குற்றம்சாட்டினார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உபயோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் தேங்காய் உடைத்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

"கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும், இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் செயல்படுகிறது," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...