கோவை: ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை சாந்தி தியேட்டர் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறு செய்வதாக கூறி, அவர்களை அகற்றக் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.



Coimbatore: கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் ஓட்டுநர்கள், கடந்த சில நாட்களாக வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோ நிறுத்தத்திலிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அங்கு கொடிக்கம்பமும் போர்டும் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், "வெளியில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களால் இங்கு பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...