உடுமலையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார், மற்றும் மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, அவை குறித்த கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து விவாதித்தனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார் செய்ய குழு அமைத்தல்.

2. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் உள்ளீடு செய்தல்.

3. துணை வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கு வேளாண்மை தோட்டக்கலை அலுவலருக்கு இணையான ஊதியம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு வலியுறுத்துதல்.

4. உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் போன்ற பல சங்கங்களை ஒருங்கிணைத்து ஊதியம் தொடர்பான நடவடிக்கை குழு அமைத்தல்.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதில் இருந்து 300க்கும் மேற்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதிதாக சங்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலு நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....