கோவை நரசிபுரத்தில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் - வனத்துறை விரட்டியடிப்பு

கோவை நரசிபுரத்தில் 7-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவையில் உள்ள நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 21) நடந்தது.

கடந்த சில மாதங்களாக கோவையின் பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ஆகிய சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டம் விவசாய தோட்டங்களுக்குள் நுழையாமல் தடுக்க முயற்சி செய்தனர். பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குட்டிகளுடன் யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இன்று (செப்டம்பர் 22) வைரலாகி வருகின்றன.

வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானைகள் மீண்டும் அப்பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...