எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசியதற்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மாவட்ட தலைவர் N.K.பகவதி பேசுகையில், "பாரம்பரியமிக்க நாட்டுக்காக தங்களுடைய சொத்துக்களை வழங்கி, இந்த நாட்டுக்காக பாட்டி, தந்தையை இழந்து நாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் தலைவரை பார்த்து தேசவிரோதி என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் அவர், "இதற்கு மேல் ராகுல் காந்தியை எச்.ராஜா விமர்சித்தால், அவர் செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...