பள்ளேபாளையம் எஸ்.ஆர்.எஸ் நகரில் ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியின் எஸ்.ஆர்.எஸ் நகரில் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.6.78 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் ரூ.6.78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த மழைநீர் வடிகால் 210 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், எஸ்.ஆர்.எஸ் நகர் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுகாதாரமான சூழலை உருவாக்க உதவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...