கோவை மாநகராட்சி பொறியாளரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

கோவை மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் விமல்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வரும் விமல்ராஜ் (42) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர்.

விமல்ராஜ் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார். அவருக்கு வஉசி பூங்கா அலுவலக வளாகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, இந்தக் குழுவினர் விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...