கோவை மாநகராட்சி பொறியாளரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

கோவை மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் விமல்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வரும் விமல்ராஜ் (42) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர்.

விமல்ராஜ் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார். அவருக்கு வஉசி பூங்கா அலுவலக வளாகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, இந்தக் குழுவினர் விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...