கவுண்டம்பாளையம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: வரும் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் - ஆ.ரவி

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள டி.வி.எஸ் நகர் செல்லும் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 



இந்தக் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் J.S. சரத்விக்னேஷ் தலைமை வகித்தார்.



கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி பேசும்போது, "நாடாளுமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றோம். அதேபோல வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்து தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்தக் கூட்டத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் அதிமுக நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் அனைவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி. தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி. பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி.ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்றஉறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் அணி நிர்வாகிகள் ஹரிஸ், டாக்டர் கனேஷ்குமார், செந்தில் மூர்த்தி, சரண்யா, சதீஸ்குமார், பரமசிவம் BLA2 வட்ட கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.



கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...