பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாகத் திரண்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் டி கே டி ராஜா தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.



இந்த ஊர்வலம் டி கே டி மில் பகுதியில் தொடங்கி, முருகன் மில் பகுதி வழியாக சென்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலத்தை சிறப்பித்தனர். இந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...