கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு

கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் நலனுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவு அரங்கில் (எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமை உரையாற்றினார். உயிரிழந்த பணியாளர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை இணைச் செயலாளர் எம்.சசிகுமார் முன்மொழிந்தார். உதவி தலைவர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரை நிகழ்த்தினார். சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சரவணன் முன்வைத்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தார்.

உதவி தலைவர் பாலகுமார், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் உதவி தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சங்க நிர்வாகி பிலிப்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பத்து முக்கிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. அவை:

1. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல்

2. காலிப் பணியிடங்களை நிரப்புதல்

3. பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்குதல்

4. வாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பதவிகளை வழங்குதல்

5. எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ள மின்பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவிகளை வழங்குதல்

6. கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு வாரியமே பராமரிப்பு பணிகளை நிர்வகித்தல்

7. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே அகவிலைப்படி உயர்வை வாரிய பணியாளர்களுக்கும் வழங்குதல்

8. வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்குதல்

குடிநீர் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...