பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் குடியிருப்புகளில் இரவில் உலா வரும் சிறுத்தைகள்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருகின்றன. சிறுத்தைகள் பரம்பிக்குளம் விருந்தினர் மாளிகை அருகே உலா வருவது குறித்து வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகே சிறுத்தைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தைகளை விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பரம்பிக்குளம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...