கோவை பெரியநாயக்கன்பாளையம் காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 7 நாள் வனவாழ்க்கை பயிற்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து 7 நாட்கள் வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளின்றி காட்டில் உயிர்வாழ்தல், தீவிரவாதிகளை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் 300 CRPF (Central Reserve Police Force) பயிற்சி அதிகாரிகள் 7 நாட்கள் தங்கி வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்துள்ள இந்த CRPF வீரர்கள், 45 நாட்கள் கோவை ராக்கி பாளையத்தில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது வனப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் 300 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடர்ந்த வனப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து இந்த அதிகாரிகள் தங்கியுள்ளனர். வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்களை கண்காணிப்பது, காடுகளில் உயிர் பிழைப்பது, மனித மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இந்த 7 நாள் பயிற்சியில், அதிகாரிகளுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் காடுகளில் எவ்வாறு தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கின்றனர்.



CRPF தலைமை உதவி ஆணையர் மற்றும் கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த வனவாழ்க்கை பயிற்சி CRPF அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...