பங்கு சந்தை முதலீட்டில் ரூ.34 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாகவும், இதனை நம்பி அவர் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அருண் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார்.

லாபத் தொகை குறித்துக் கேட்டபோது பணம் முதிர்வு அடைவதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் லாபத் தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திரும்பக் கேட்டபோது தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இருவரை ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...