கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு இரக மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர்.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் அவர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். புது தில்லியிலுள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையத்தின் (ASRB) பரிந்துரையின் படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்த நியமனத்தை செய்துள்ளது.

முனைவர் கோவிந்தராஜ் ஏற்கனவே கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், 1991-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்காக தேர்வானார்.

முனைவர் கோவிந்தராஜ் பயிர் இரகங்களை உருவாக்குதல், எரிசக்தி இரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை பெற்றோர்களாக பயன்படுத்தி புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட கோ 0232 மற்றும் கோ 0233 கரும்பு இரகங்கள் வட இந்தியாவில் பிரபலமானவை. மேலும், கோ 09004 கரும்பு இரகம் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க சாதனையாக, முனைவர் கோவிந்தராஜ் உருவாக்கிய SBIEC 14006 என்ற எரிசக்தி கரும்பு இரகம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவரது சிறந்த பங்களிப்புக்காக 'சர். T. S. வெங்கட்ராமன் சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது உட்பட பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும், முனைவர் கோவிந்தராஜ் ஃபிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு இரகங்கள் உருவாக்கத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். இந்த நியமனம் கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...