உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு, ஒன்றிய பாஜக மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.



ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.R.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் A.பஞ்சலிங்கம் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தோழன் ராஜா, வசந்தி, ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றினார்கள். முன்னதாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த போராட்டம், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...