கோவை செல்வபுரத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

கோவை செல்வபுரத்தில் தள்ளுவண்டி வியாபாரி முகமது கரீமை கத்தி முனையில் மிரட்டி தாக்கி ரூ.500 பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 27 அன்று நடந்தது.


Coimbatore: கோவை செல்வபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த முகமது கரீம் (55) என்பவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 27 அன்று செல்வபுரம் இந்திராநகர் செல்வ விநாயகர் கோயில் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் ரூ.1000 கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

முகமது கரீம் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த மூவரும் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து முகமது கரீம் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தெலுங்குபாளையம் உடையார் தெருவை சேர்ந்த கார்த்திகை செல்வம் (27), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அர்ஜூன் (23), கல்லா மேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் என கண்டறிந்தனர்.

இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....