கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

கோவையில் புதன்கிழமை, மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் புதன்கிழமை (24.07.2024) அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு, புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வழங்கினார்.



கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாயிபாபா காலனி, கணபதி, மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு வார்டுகளின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சாயிபாபா காலனியில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி திமுக செயலாளர் கே.எம்.ரவி முன்னிலையில், வார்டு எண்கள் 18, 31, 32, 45 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கணபதி பகுதியில், பகுதி திமுக செயலாளர் கோவை லோகு முன்னிலையில், வார்டு எண்கள் 29, 30, 46, 47 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பகுதி துணைச் செயலாளர் வி.டி.செந்தில்குமார், அவைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மணியகாரன்பாளையம் பகுதியில், பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் முன்னிலையில், வார்டு எண்கள் 19, 20, 25 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.வெள்ளிங்கிரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அனைத்து நிகழ்வுகளிலும் கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...