கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

கோவையில் புதன்கிழமை, மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் புதன்கிழமை (24.07.2024) அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு, புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வழங்கினார்.



கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாயிபாபா காலனி, கணபதி, மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு வார்டுகளின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சாயிபாபா காலனியில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி திமுக செயலாளர் கே.எம்.ரவி முன்னிலையில், வார்டு எண்கள் 18, 31, 32, 45 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கணபதி பகுதியில், பகுதி திமுக செயலாளர் கோவை லோகு முன்னிலையில், வார்டு எண்கள் 29, 30, 46, 47 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பகுதி துணைச் செயலாளர் வி.டி.செந்தில்குமார், அவைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மணியகாரன்பாளையம் பகுதியில், பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் முன்னிலையில், வார்டு எண்கள் 19, 20, 25 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.வெள்ளிங்கிரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அனைத்து நிகழ்வுகளிலும் கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...