நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024-25 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: 2024-25 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் நிவாரண நிதி, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மற்றும் ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா" என்ற பாடலும் பாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுக்காக முதல்வர் கேட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திராவிற்கும் பீகாருக்கும் நிதி ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை," என்று குற்றம்சாட்டினார்.



மேலும் அவர், "இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மோடி அரசு மாற்றான் தாய் மனநிலையோடு செயல்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது, அனைத்து கட்சிகளாலும் திட்டமிட்டு கருப்புக் கொடி காட்டப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...