உடுமலை அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

உடுமலை அருகே குட்டியகவுண்டனூர் கிராம மக்கள் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உடுமலை பிரதான சாலையில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலைமறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித் துறை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குட்டியகவுண்டனூர், உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், கிழவன்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் உடுமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...