சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்; பல்வேறு இடங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 18) துவக்கி வைத்தார்.





தொடர்ந்து சூலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.





பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் பேசிய ஆட்சியர், அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



மேலும் வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவிகளைச் சந்தித்து பேசிய ஆட்சியர், ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.

கள ஆய்வின் இடையே ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பள்ளிகள் CSR உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார்.

தென்மேற்கு பருவமழை குறித்து பேசிய ஆட்சியர், "கோவை மாவட்டத்தில் மழை சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது, அருகே சென்று செல்ஃபி எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம்," என்று கூறினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...